’29 ‘திரைப்பட விமர்சனம்!

சென்னை:

ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ மற்றும் ஜி ஸ்குவாட் சார்பில் கார்த்திகேயன்.எஸ் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரித்திருக்கும் ’29’  படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ரத்னகுமார்.

விது,ப்ரீத்தி அஸ்ராணி, அவினாஷ், மாஸ்டர் மகேந்திரன் ,சிந்து ஷியாம், பிரேம்குமார், ஆதிரா பாண்டிய லட்சுமி, ஆறுமுகவேல் , ஷெனஸ் பாத்திமா ,எஸ்ஏ சதீஷ்குமார், ஷாலினி, பிரியங்கா ராய், பிரதீப் ,அனுஸ்ரீவேலன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

29 வயது வாலிபனான விது சேலத்தில் இருந்து வந்து சென்னையில் ஒரு கம்பெனியில் வேலை பார்க்கிறார்..அவரது வயது 29 என்பதால் வீடு குடும்பம் என்று உழைத்துவிட்டு காலத்தைக் கடந்து விட்டு திருமணம் தடைபட்டு தள்ளிப்போய் ஒரு இளைஞனாக நிற்கிறார்.. அந்த சூழலில் 29 வயதான விது வாழ்க்கையின் மீது எந்த ஒரு கவலையும் இல்லாமல், ஏதேனும் ஒரு விஷயத்தை லட்சியமாக கையில் எடுத்து வாழவேண்டும் என்று நினைக்கிறார். விது வேலை செய்யும் அதே கம்பெனியில் புதிதாக வேலைக்கு சேர்கிறார் ப்ரீத்தி அஸ்ராணி. அவர்  ஐஏஎஸ் ஆக வேண்டும் என்று ஒரு இலட்சியத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இருவரும் ஒரே கம்பெனியில் வேலை செய்வதால் மிகுந்த நட்புடன் பழகுகின்றனர். அந்த நட்பு ஒரு சில கால கட்டங்களுக்குப் பிறகு காதலாக மாறுகிறது.

29 வயதாகியும் தனக்கென்று தனி அடையாளம் இல்லாமல் தவிக்கும் நாயகன் விது, நாயகி பிரீத்தி அஸ்ரானியின் காதலால், அழகான பெண்ணின் காதலன் என்ற அடையாளத்தை பெறுகிறார்.  விது தனது வாழ்க்கையில் எந்த ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தாலும், காதல் தவிர வேறு ஒரு லட்சியமும் இல்லாமல் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் அவரது மனநிலையை மாற்ற காதலி ப்ரீத்தி அஸ்ராணி  முயற்சி செய்கிறார். ஆனால் அந்த முயற்சி தோல்வியடைய, காதலை முறித்துக்கொண்டு விதுவை விட்டு பிரிந்து செல்ல முடிவு செய்கிறார் ப்ரீத்தி அஸ்ராணி. காதலை முறித்துக் கொண்ட ப்ரீத்தி அஸ்ராணி தான் ஐஏஎஸ் படித்து கலெக்டராக வர வேண்டும் என்ற கனவும், விதுவின் பாதுகாப்பற்ற மனநிலையும் அவர்களை வெவ்வேறு திசைகளுக்கு கொண்டு செல்கிறது.  இறுதியில் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா?  இருவரது மனநிலையில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன என்பதுதான் “29” படத்தின் மீதி கதை.

இப்படத்தில் சத்யாவாக விது நடித்திருக்கிறார். ’ரெட்ரோ’ படத்தில் வில்லனாக மிரட்டிய அவர் தன் காதலியிடம்   பேசும் வசனமும். நடிப்பும்  கச்சிதமாக பொருந்தி நடித்துள்ளார், குறிப்பாக காதலி அவரிடம்  காதலை சொல்லுகின்ற தருணம் மிக அழகு என்றே சொல்லலாம். காதல் தோல்வியால் உடைந்து போகும் மனநிலை, காதலியை மீண்டும் பெற வேண்டும் என்ற ஏக்கம் ஆகியவற்றை மிகவும் இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

ப்ரீத்தி அஸ்ராணி. தமிழ் சினிமாவிற்கு கிடைத்துள்ள திறமையான நடிகைகளில் ஒருவராக அவர் இந்தப் படத்தில் அனைவரையும் கவர்கிறார்.  சமகால பெண்களின் பிரதிநிதியாக வருகிற அந்தப் கதாபாத்திரம் படத்திற்குப் பெரும் பலமாக அமைந்துள்ளது. காதலனை நேசித்தாலும், காதலனை லட்சியவாதியாக மாற்ற முயற்சித்து பின்னர் விட்டு பிரிந்து தவிக்கும் காட்சிகளில் கலங்க வைக்கிறார்.

விதுவின் நண்பனாக வரும் அவினாஷ் இயல்பாக நடித்து பார்ப்பவர்களிடம் பதிகிறார். மகேந்திரன் வில்லன் கதாபாத்திரத்தில் குறைந்த நேரமே வந்தாலும், கதையின் நகர்வுக்கு தேவையான பங்கினை சிறப்பாக செய்திருக்கிறார்.

நாயகனின் அம்மாவாக  வரும் ஆதிரா பாண்டியலக்‌ஷ்மி, நாயகியின் அம்மாவாக  வரும் சிந்து ஷியாம் ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக பயணித்து இருக்கிறார்கள்.

மேலும்  துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள பிரேம்குமார், ஆறுமுகவேல் , ஷெனஸ் பாத்திமா ,எஸ்ஏ சதீஷ்குமார், ஷாலினி, பிரியங்கா ராய், பிரதீப் ,அனுஸ்ரீவேலன் போன்ற நடிப்புக் கலைஞர்கள் அனைவருமே குறை இல்லாத நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்.

இப்படத்தில் ஷான் ரோல்டனின் இசையில் ‘சீலே சீலே’ பாடல் அனைவரையும் கவர்கிறது. பல காட்சிகளை ரசிக்க வைக்கும் விதத்தில் பின்னணி இசை உணர்வுப்பூர்வமாக பயணிக்கிறது.

மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவுச் சிறப்பாக அமைந்துள்ளது  இயக்குநரின் எண்ணங்களை காட்சியாக மாற்றும் திறமையான ஒளிப்பதிவாளராக மீண்டும் தன்னை நிரூபித்திருக்கிறார்.

எழுத்து மற்றும் இயக்கம்  ரத்தின குமார் ‘மேயாத மான்’ படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு அழகான காதல் கதையை, சமுதாய மக்கள் புரிந்துக் கொள்ளும்படி காதல் உணர்வுகளை தத்ரூபமாக  கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு ஆணும் பெண்ணும் மகிழ்ச்சி அடைவது என்பது வாழ்க்கை அல்ல, அதையும்  தாண்டி லட்சியங்களும் நோக்கங்களும் கனவுகளும் வாழ்க்கையில் உள்ளன என்பதை சொல்வதற்கு ஒரு தெளிவு வேண்டும் என்பதை மிக அருமையாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.

மொத்தத்தில் ’29’ காதலர்கள் கொண்டாடும் படம்.

ரேட்டிங் 4/5.

"29" MOVIE REVIEW NEWSFeatured
Comments (0)
Add Comment