’வடம்’ திரைப்பட விமர்சனம்!

சென்னை:

விமல், நட்டி நடராஜ்,சனஷ்காஸ்ரீ, முனீஷ்காந்த், ஆடுகளம் நரேன், இந்துமதி, பால சரவணன், மதுசூதனன், தீபா சங்கர் நடித்துள்ள ‘வடம்’ படத்தை கேந்திரன் வி எழுதி இயக்கியிருக்கிறார். பிரசன்னா எஸ். குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  டி. இமான் இசையமைத்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தின் பின்னணியில் ‘வட மஞ்சுவிரட்டு’ திருவிழா மையமாக வைத்து இக்கதை நகர்கிறது. விமல் ஊர்ப் பெரிய மனிதராக இருக்கும் தன் தந்தை நரேனுடன் இணைந்து  பல காளைகளை வளர்த்து வருகின்றனர். மாடுகள் மீது பாசம் கொண்டவரான விமல்,  வேகமாக ஓட முடியாததால் கைவிடப்பட்ட கன்றுக் குட்டியைத் தனது வீட்டில் வளர்த்து பயிற்சி அளித்து பெரிய போட்டிக்காளையாக உருவாக்குகிறார். அந்த காளைதான் பாண்டி முனி. பல வருடங்களாக வட மஞ்சு விரட்டு போட்டியில் முதல் பரிசைத் தட்டி வருகிறது பாண்டி முனி. இந்த சூழலில் வட மாடு போட்டியில் பாண்டி முனி ஜெயிப்பதை கண்டு பொறாமை கொள்ளும் நட்டி அந்த மாட்டை தனக்கு தரும்படி விமலிடம் கேட்கிறார். அதற்கு விமல்  மறுத்து விட இருவருக்கும் இடையே பகை உருவாகிறது. இதனால் ஆத்திரமடையும் நட்டி தனக்கு காளையை கொடுக்காத விமலை ஒழிக்கத் திட்டம் தீட்டுகிறார்.

இந்த மோதலுக்கு நடுவே பாண்டிமுனி காளையை கொல்லும் முயற்சியில் ஈடுபடும்போது படுகாயத்துடன் உயிர் பிழைத்து மருத்துவ சிகிச்சையில் இருக்கிறது. விமலின் காளை சிகிச்சையில் இருக்கின்ற சூழலில்  ஒரு கொலை வழக்கு ஒன்றில் ஜாமீனில். வரும்போது அவரை நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து ஒரு கும்பல் கொலை செய்ய முயற்சிக்கிறது. மறுபக்கம், விமலின் வீட்டில் பணியாற்றிய ஒருவர் அவரை கொலை செய்ய திட்டம் போடுகிறார். இப்படி வம்பு வழக்கு, அச்சுறுத்தல் பகைமை என்று வளரும் விமலுக்குள் ஒரு காதல் மலர்கிறது. அவரது வாழ்க்கையில் சனஷ்கா ஸ்ரீ, தனது காளைக்கு பயிற்சி அளிக்க உதவி செய்ய முயலும் சமயத்தில் விமலின் மனதில் காதலை விதைக்கிறார். ஆனால், இந்த காதலே ஒரு கட்டத்தில் பேரிடியாக மாறுகிறது. அப்படி ஒரு அதிர்ச்சியை கொடுக்கிறார் அவரது காதலி சனஷ்கா ஸ்ரீ. அந்த அதிர்ச்சியால் துவண்டு போன விமல் அதிலிருந்து மீண்டு வந்தாரா? காதலி சனஷ்கா ஸ்ரீ மீது உள்ள காதல் என்ன ஆனது? என்பது “வடம்” படம் பார்த்தால் தெரியும்.

இப்படத்தில் கதாநாயகனாக  நடித்திருக்கும் விமல்,மாடுவளர்க்கும் வீரர் என்பதால் தம் இயல்புக்கு மாறாமல் நடித்திருக்கிறார். காதலியின் வருகையில் மகிழ்ச்சியும் அதன்பின் ஏற்படும் அதிர்ச்சியும் அவர் நடிப்பில் நன்றாக வெளிப்படுகிறது.முறுக்குமீசை தோற்றம் அவருக்கு மேலும் பலமாக அமைந்திருக்கிறது.

நாயகியாக நடித்திருக்கும் சனஷ்காஸ்ரீ, அழகான புதுமுகம். முதல்படத்திலேயே கனமான கதாபாத்திரம்.அதற்குத் தகுந்தவாறு நடித்துமிருக்கிறார்.அவருக்கு இன்னும் கூடுதல் வாய்ப்பு கொடுத்திருக்கலாம்.

வில்லனாக நடித்திருக்கும் நட்டி, அதற்கு எப்போதுமே பொருத்தமானவர்தான்.இந்தப்படத்திலும் குறை வைக்காமல் நிறைவாக நடித்திருக்கிறார்.

முனீஷ்காந்த்துக்கு இந்தப்படத்தில் மிக முக்கிய வேடம்.அதில் சரியாக நடித்து நல்ல வரவேற்பைப் பெறுகிறார்.

விமலின் தந்தையாக நடித்திருக்கும் நரேன்,அம்மாவாக நடித்திருக்கும் இந்துமதி,அத்தையாக நடித்திருக்கும் தீபா சங்கர், உறவினராக நடித்திருக்கும் பால சரவணன், பகையாளியாக நடித்திருக்கும் மதுசூதனன் ராவ் ஆகிய அனைவரும் அசல் கிராமத்து மனிதர்களாகவே வாழ்ந்து இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ். குமார், மஞ்சுவிரட்டுப் போட்டிக் களத்தைக் காட்சிப்படுத்தி இருக்கும் விதம் சிறப்பு.

டி.இமான் இசையமைத்துள்ளார்.பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்தான்.  பின்னணி இசை கதையின் ஓட்டத்திற்கு தேவையான அளவில் மட்டுமே பயணித்து இருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் கேந்திரன்.வி, தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படாத வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியைப் பின்னணி ஆக்கி கதை உருவாக்கி தான் சொல்ல வந்ததை அனைத்து தரப்பினரும் ரசிக்க கூடிய பொழுதுபோக்கு படமாக கொடுத்ததில் இயக்குநர் கேந்திரன்.வி, வெற்றி பெற்றிருக்கிறார்.

மொத்தத்தில், ‘வடம்’ விமலுக்கு ஒரு தரமான கிராமத்து படம்.

ரேட்டிங் 3/5.

 

"VADAM" MOVIE REVIEW NEWSFeatured
Comments (0)
Add Comment