நடிகர் துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ, ரவீந்திர விஜய், நிழல்கள் ரவி, காயத்ரி, கஜேஷ் நாகேஷ், பகவதி பெருமாள், வையாபுரி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி தற்போது திரைக்கு வந்திருக்கும் திரைப்படம் தான் ‘காந்தா’. இப்படத்தை செல்வமணி செல்வராஜ் எழுதி இயக்கியிருக்கிறார்.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
இது 1950கள்-60களில் தமிழ்நாட்டின் சென்னை ஸ்டுடியோக்களில் நடக்கும் கதை. அதாவது அந்த காலத்தில் சூப்பர் நடிகரான எம்.கே. தியாகராஜ பாகவதர் சம்பந்தப்பட்ட கதையை மையமாக வைத்து “காந்தா” படத்தை எடுத்து இருக்கிறார்கள் என்று திரையுலகில் உள்ள பலரும் சொல்லிக் கொண்டிருந்த சமயத்தில் அது மாதிரியான காட்சிகள் எதுவும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். 50 ஆண்டுகளுக்கு முன் தமிழ் திரைத்துறையில் உச்சநட்சத்திரமாகத் திகழ்கிறார் துல்கர் சல்மான். சாதாரணமாக நாடகதுறையில் நடித்துக் கொண்டிருந்த சினிமாவில் அவரை கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் சமுத்திரக்கனி. அந்த சமயத்தில் இயக்குநர் சமுத்திரக்கனியின் கனவு கதையாக உருவாகும் ‘சாந்தா’ என்ற படத்தை இயக்கியபோது சில பிரச்சனைகளால் அப்படத்திலிருந்து துல்கர் சல்மான் விலகி விடுகிறார். பின்னர், மீண்டும் அந்தப் படத்தை தொடங்க முடிவு செய்கிறார் சமுத்திரக்கனி. இந்த சூழலில் பல ஆண்டுகளுக்குப் பின் இருவரும் சந்திக்கும்போது தான அறிமுகப்படுத்திய நேரத்தில் இருந்தது போலவே துல்கர் சல்மான் இருப்பார் என்று எதிர்பார்த்த சமுத்திரக்கனிக்கு பெரும் ஏமாற்றம்தான் ஏற்பட்டது.
இவர் அடு
இந்தப்படத்தில் அந்தக் காலத்துக் கதாநாயகர்களைக் கண்முன்னே நிறுத்தி பாராட்டுப் பெறுகிறார் துல்கர் சல்மான். நடிப்பு சக்கரவர்த்தி என்ற பட்டப்பெயருடன் நடித்திருக்கும் துல்கர் சல்மான், இப்படத்தில் ஒரு நடிப்பு சக்கரவர்த்தி என்பதை காட்சிக்கு காட்சி தன் நடிப்பின் மூலம் நிரூபித்து காட்டியிருக்கிறார். சமீபத்தில் நடித்த படங்கள் ‘சீதா ராமம்’, ‘லக்கி பாஸ்கர்’ போன்ற படங்கள் பெரும் வெற்றி பெற்றது. அடுத்து என்ன படத்தில் நடிக்கப் போகிறார் என்ற எண்ணத்தில் இருந்த போது பிரமிக்க வைக்கும் நடிப்பை வெளிப்படுத்தி, இதில் ஏற்று நடித்த கதாபாத்திரத்தை உணர்ந்து இப்படத்தில் வாழ்ந்திருக்கிறார் துல்கர் சல்மான்.
இப்படத்தில் இன்னொரு நாயகனாகவே இருக்கிறார் சமுத்திரக்கனி. உண்மையிலேயே இயக்குநரான அவர் இந்தப்படத்தில் ஏற்றிருக்கும் இயக்குநர் கதாபாத்திரத்தை மிக எளிதாகச் சிறப்பாக செய்திருக்கிறார். கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரம் மட்டும் அல்ல! தனது நடிப்பிலும் துல்கர் சல்மானுடன் போட்டி போட்டு நடித்து அசத்துகிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் பாக்யஸ்ரீ போர்ஸ், புதுவரவு.என்றாலும் நடிப்பில் அந்தக்காலத்துக் கதாநாயகிகளைப் போலவே வியக்க வைத்திருக்கிறார். ஒரு அப்பாவியான முகபாவனையால் தனது அழகான நடிப்பாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டுச் செல்லும் ஒரு அழகு தேவதையாக வந்து கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து இருக்கிறார்.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ராணா டகுபதியின் நடிப்பு வித்தியாசத்தை காட்ட முயற்சித்திருந்தாலும், கொஞ்சம் ஓவராக நடிப்பைக் கொடுத்து ஆச்சர்யப்படுத்திச் செல்கிறார்.
துல்கரின் மனைவியாக நடித்திருக்கும் காயத்ரி,மாமனாராக நடித்திருக்கும் நிழல்கள் ரவி,ரவீந்திர விஜய்,ஆடுகளம் நரேன்,பக்ஸ், வையாபுரி மற்றும் உதவி இயக்குநராக நடித்திருக்கும் கஜேஷ்நாகேஷ் ஆகியோர் தங்களுக்கு கொடுத்த பணியை மிக சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
ஜானு சந்தரின் இசை – பாடல்களும் பின்னணி இசையும் அந்த காலநிலையுடன் நன்கு ஒத்துப்போகும் வகையில் படத்திற்க்குப் பலம் சேர்த்திருக்கிறார்.
டானி சஞ்செஸ் லோபெஸின் ஒளிப்பதிவு நல்ல காட்சியனுபவத்தைக் கொடுத்திருக்கிறது.கறுப்பு வெள்ளை காலகட்டம் வண்ணக் காலம் ஆகியனவற்றை அழகாக வேறுபடுத்திக் காட்டி வரவேற்புப் பெறுகிறார். அக்காலத்து சென்னையை கிராபிக்ஸ் மூலம் சித்தரித்த விதம், அதை காட்சியோடு இணைத்த விதம் பாராட்டுதலுக்குரியது.
தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவே கொண்டாடும் வகையில் இயக்குனர் செல்வமணி செல்வராஜ் மிகவும் நேர்த்தியாக கதை எழுதி இயக்கியிருக்கிறார். முதல் பாதி ரசிக்க கூடிய நாடகமாக பயணித்தாலும், இரண்டாம் பாதி கதை வேறு பாதையில் பயணித்து ரசிகர்களை ஆச்சயத்தில் அமர வைக்கிறது.
மொத்தத்தில், ‘காந்தா’ வியக்க வைக்கும் படம்.
ரேட்டிங் 4/5.
RADHAPANDIAN.