’பிளாக்மெயில்’ திரைப்பட விமர்சனம்!

சென்னை:

ஜிவி பிரகாஷ், தேஜு அஸ்வினி, ஸ்ரீகாந்த், பிந்து மாதவி, லிங்கா, முத்துக்குமார், ரெட்டின் கிங்ஸ்லி, ரமேஷ் திலக், ஹரிப்பிரியா ம்ற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான் ‘பிளாக் மெயில்’. இப்படத்தை மு. மாறன் இயக்கி இருக்கிறார்.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

ஒரு  மருந்து குடோனில் இருந்து  மருந்துகளை எடுத்துச்சென்று கடைகளுக்கு சப்ளை செய்யும் வேலை பார்க்கிறார் ஜிவி பிரகாஷ். ஒரு நாள் அந்த மருந்து கம்பெனி உரிமையாளர் ஜிவி பிரகாஷிடம் ஒரு பார்சலைக் கொடுத்து அதை முக்கியமான ஒருநபரிடம் கொடுக்க சொல்கிறார் உரிமையாளர் முத்துகுமார்.. ஜிவி பிரகாஷும் தனது உரிமையாளர் கொடுத்த அந்த பார்சலை எடுத்துக்கொண்டு செல்லும் பொழுது தன் காதலி தேஜஸ்வினி தற்போது கர்ப்பிணியாக இருக்கிறார் என்பதை உணர்ந்து உடல் நிலை  சரியில்லாத காரணத்தால் காதலியை  மருத்துவமனைக்கு அழைத்து சென்றபொழுது ஜி.வி.பிரகாஷின் வேனை யாரோ ஒரு திருடன் யாருக்கும் தெரியாமல் கொண்டு போய் விடுகிறான்.அந்த பார்சலையும் அந்த வாகனத்துடன் கடத்தி விடுகிறார்கள்.  இது குறித்து தனது உரிமையாளரிடம் ஜீவி பிரகாஷ் கூறும் போது அவர் பதறி போய் அதில் 50 லட்சம் ரூபாய் பொருள் இருக்கிறது யார் எடுத்துச் சென்றார்கள் என்று தெரியாமல் முழிக்கிறாயே.. ஆகவே அதை நீ கொடுக்கும்வரையில் உன்னை சும்மா விடமாட்டேன் என்று  அவரது காதலியை கடத்தி வைக்கிறார் உரிமையாளர் முத்துகுமார்.

இந்த சமயத்தில் தொழிலதிபர் ஸ்ரீகாந்த் தனது மனைவி பிந்து மாதவி மற்றும் தங்களது பெண் குழந்தையுடன் ஊட்டிக்கு செல்கிறார்கள். இதற்கிடையே, தொழிலதிபர் ஸ்ரீகாந்தின் மனைவியான பிந்து மாதவியை அவரது முன்னாள் காதலன் வில்லன் லிங்கா மிரட்டி பணம் பறிக்க முயற்சிக்கிறார். இந்த நிலையில், ஜி.வி.பிரகாஷின் பண தேவையை அறிந்துக் கொண்டு அவர் மூலம், தொழிலதிபர் ஸ்ரீகாந்தின் குழந்தையை கடத்த வில்லன் லிங்கா திட்டம் போடுகிறார். அந்த குழந்தையை தான்தான் கடத்தி வைத்திருப்பதாக கூறி ஸ்ரீகாந்தை பிளாக்மெயில் செய்து  ஐம்பது லட்சம் பணத்தை வாங்கி அந்த பணத்தை தன் மருந்து கம்பெனி உரிமையாளரிடம் கொடுத்து காதலியை மீட்க எண்ணுகிறார் ஜி.வி.பிரகாஷ். ஆனால் ஜி.வி.பிரகாஷ் அந்த குழந்தையை கடத்துவதற்கு முன்பாகவே அந்த குழந்தை வேறு ஒருவரால் கடத்தப்படுகிறது. குழந்தையை கடத்தினால் கண்டிப்பாக பணம் கிடைக்கும் என்பதால், குழந்தையை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஜி.வி.பிரகாஷ் ஈடுபடுகிறார். குழந்தை ஒவ்வொருவரின் கையாக மாறி மாறி,  வெவ்வேறு தரப்பினரால் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது. இறுதியில் அந்த குழந்தையை கடத்தியவர்களை ஜி.வி.பிரகாஷ்  கண்டுபிடித்து,  தன் காதலியை கரம் பிடித்தாரா? இல்லையா? என்பதுதான் ‘பிளாக் மெயில்’ படத்தின் மீதிக் கதை.

ஒரு அப்பாவி சரக்கு வாகன ஓட்டுனராக  ஜி.வி.பிரகாஷ் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து மிக சிறப்பாக நடித்திருக்கிறார். தனக்குக் கொடுத்த பணியை எப்போதுமே சரியாக செய்து முடிப்பவர் ஜி வி பிரகாஷ். இப்படத்திலும், தனது நடிப்பு திறனை தனக்கென்று ஒரு பாணியில் சரியான முறையில் செய்திருக்கிறார்.

நாயகி தேஜூ அஸ்வினி மிக அழகானவராக இருந்தாலும் சில காட்சிகளில் மட்டுமே வருகிறார்.   ஒரு குழந்தைத்தனமான முகம் கொண்ட இவர் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். இப்படத்திற்குப் பிறகு அவரைத் தேடி பல படங்கள் வரும் என்பதில் ஐயமில்லை.

ஸ்ரீகாந்த் இந்தப் படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்குழந்தை மற்றும் மனைவி மீதான பாசம் என  தனது அனுபவமிக்க நடிப்பு மூலம் தனது கதாபாத்திரத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்த்திருக்கிறார்.

ஸ்ரீகாந்தின் மனைவியாக வரும் பிந்துமாதவி, லிங்கா, முத்துக்குமார், ரெடின் கிங்க்ஸ்லி, ரமேஷ் திலக் உள்ளிட்ட படத்தில் நடித்த அனைவருமே கதைக்கேற்ற கதாபாத்திரங்களாக நடித்திருந்தனர்.

சாம்.சி.எஸ் இசையில் பாடல்களும், பின்னணி இசையும்  ஒரு திரில்லர் படத்துக்கு எப்படி இருக்க வேண்டுமோ, அப்படியே படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய், சஸ்பென்ஸ் திரில்லர் கதைக்கு ஏற்றவாறு ஊட்டியில் உள்ள இயற்கை எழில் மிகுந்த பகுதியை ரம்மியமாகவே காட்டி இருக்கிறார்.

கதை, எழுதி இயக்கியிருக்கும் மு.மாறன், குழந்தை கடத்தல் பின்னணியில் எதிர்பாராத திருப்பங்கள் மூலம் இந்த  படத்தின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கச்  செய்து, அடுத்தது என்ன நடக்கும் என்பதை விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் நம்மை கதையின் பின்னால் ஓட வைத்துக் கொண்டே இருந்தார் இயக்குனர். அதற்காக அவருக்கு பெரிய பாராட்டுக்கள்.

மொத்தத்தில், ‘பிளாக்மெயில்’ படம் கண்டிப்பாக எல்லோரையும் ரசிக்க வைக்கும்.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.

 

 

 

'Black Mail' Movie Review.Featured
Comments (0)
Add Comment