கதை, திரைக்கதை எழுதி , பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உதயா, அஜ்மல், யோகிபாபு, ஜான்விகா, ஷாந்திகா, பவன், தயா பன்னீர், ஸ்ரீதர், பிரபு ஸ்ரீநிவாஸ், பிரபு சாலமன், உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி, திரைக்கு வந்திருக்கும் படம் தான் ‘அக்யூஸ்ட்’.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
சென்னையில் உள்ள ஒரு முக்கிய கட்சி எம்எல்ஏ பவனை கொலை செய்த குற்றத்திற்காக புழல் ஜெயில் அடைக்கப்படுகிறார் உதயா. இந்த கொலை சம்பந்தமாக உதயாவை சேலம் உயர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக காவல்துறையினர் ஒருவேனில் அழைத்துச் செல்கின்றனர். அந்த காவல்துறையில் முக்கிய காவலரான அஜ்மல் அவர்களுடன் செல்கிறார். பிரபல அரசியல் கட்சி எம்எல்ஏ கொலை வழக்கு என்பதால் காவல் துறையினர் மிகவும் எச்சரிக்கையாக உதயாவை அழைத்துச் செல்கின்றனர். இந்த சூழ்நிலையில் உதயாவை கொலை செய்ய காவல்துறையினர் செல்லும் வாகனத்தை அடித்து ஒரு ரவுடி கும்பல் நொறுக்குகின்றனர். காவல்துறை சென்ற வாகனத்தை தாக்க வந்த ரவுடி கும்பலிடம் இருந்து உதயாவை காவலர் அஜ்மல் காப்பாற்றி, வேலூரில் உள்ள ஒரு கிராமத்தில் தங்க வைக்கிறார்.
ரவுடி கும்பலிடம் இருந்து உதயாவை அஜ்மல் காப்பாற்றினாலும் அவரை கொலை செய்ய உயர் காவல்துறை அதிகாரிகள் என்கவுண்டர் செய்ய உத்தரவிடுகின்றனர். இந்த விஷயத்தை தெரிந்து கொண்டு அஜ்மல் எப்படியாவது உதயாவை காப்பாற்ற வேண்டும் என்று முயற்சி செய்கிறார். ஆனால் அந்த ரவுடி கும்பல் , உதயாவை கொலை செய்ய தொடர்ந்து துரத்துகிறார்கள். அந்த சமயத்தில் ஒரு லாட்ஜிற்க்கு சென்று அடைக்கலம் ஆகும்போது அங்கு யோகிபாபு இருவருக்கும் தங்குவதற்கு உண்டான உதவிகள் செய்கிறார். இறுதியில் அந்த ரவுடி கும்பல் எதற்காக உதயாவை கொலை செய்ய முயல்கிறது.? அந்த கொடிய ரவுடி கும்பலிடம் இருந்து உதயாவை அஜ்மல் காப்பாற்றினாரா? காவல்துறையினர் என்கவுண்டர் செய்ய முயலும் போது உதயா அதிலிருந்து தப்பித்தாரா என்பது தான் ‘அக்யூட்ஸ்’ படத்தின் மீதி கதை.
இப்படத்தில் கனகு என்ற கதாபாத்திரத்தில் உதயா நடித்திருக்கிறார். இவர் பல படங்களில் நடித்திருந்தாலும், இதுவரையில் இல்லாத அளவிற்கு தனது நடிப்பு திறமையை மிக சிறப்பாகவே வெளிப்படுத்தியிருக்கிறார். மிகவும் சுறுசுறுப்பாக தனது கதாபாத்திரத்திற்கென்று மெனக்கெடல் செய்து கதாபாத்திரத்தை உணர்ந்து ஒரு கொலைகாரனாகவே நடித்து அசத்தி இருக்கிறார். இந்த மாதிரி நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்தால் கண்டிப்பாக தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களின் பட்டியலில் உதயா இடம் பிடிப்பது உறுதி என்பதில் ஐயமில்லை.
காவல்துறையில் கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் அஜ்மல் நடிப்பில் அடுத்த கட்டத்திற்கு சென்றிருக்கிறார். இந்த கதைக்கு முக்கிய கதாபாத்திரம் என்பதால், அதற்கு தேவையான மிகையில்லா நடிப்பில் அசத்தி உள்ளார். காவல்துறையின் பலம் துப்பாக்கி என்பதால் அதற்கேற்றவாறு அந்த துப்பாக்கியை கையில் பிடித்துக் கொண்டு மிடுக்காக, சுறுசுறுப்பாக நடித்திருப்பதை பாராட்டலாம்.
யோகி பாபு லாட்ஜ் உரிமையாளராக வருகிறார். தனக்கே உரித்தான பஞ்ச் டயலாக் பேசி அடிக்கும் காமெடிகளும், உதயா அஜ்மல் இருவரையும் காப்பற்றுவதற்கு அவர் எடுக்கும் முயற்சிகள் நம்பகத் தன்மை இல்லாமல் இருந்தாலும் அனைவரையும் ரசிக்க வைக்கின்றன.
கதாநாயகியாக நடித்திருக்கும் ஜான்விகா காளக்கேரி, எளிமையாக இருந்தாலும், நடிப்பு மற்றும் நடனத்தில் அசர வைத்தியிருக்கிறார்.
எம்.எல்.ஏவாக நடித்திருக்கும் பவன், அவரது மனைவியாக நடித்திருக்கும் சுபத்ரா, எம்.எல்.ஏ-வின் தம்பியாக நடித்திருக்கும் ஸ்ரீதர், தயா பன்னீர்செல்வம், இயக்குநர் பிரபு ஸ்ரீனிவாஸ், நாயகனின் அக்காவாக நடித்திருக்கும் தீபா பாஸ்கர், அரசியல்வாதியாக நடித்திருக்கும் டி.சிவா என அனைத்து நடிகர்களும் கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு தங்களது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் மருதநாயகம்.ஐ, சண்டைக்காட்சிகளையும், காவல்துறை வாகனத்தை ரவுடிகள் துரத்தும் காட்சிகளையும் மிக சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN.