சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம்பிரபு, சுஷ்மிதா பட், ரமேஷ் திலக், சத்யராஜ், ஆருள்தாஸ் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் லவ் மேரேஜ்
கதை
உசிலம்பட்டியில் ஜவுலிக்கடை நடத்திவருகிறார் விக்ரம் பிரபு. இவர் 5 வருடமாக காதலித்த பெண் குடும்ப சூழ்நிலையை சொல்லி வேறொருவனை திருமணம் செய்து கொள்கிறார். அந்த விரக்தியில் காலம் சேன்றுவிட வயதும் 33 ஆகிவிடுகிறது. ராசியில்லாதவர் என முத்திரையும் விழுகிறது. அதனாபின் பல பெண்களை பார்க்க கடைசியாக கோபிசெட்டிபாளையத்தில் உள்ள பெண்ணை பார்த்து நிச்சயமும் செய்கிறார் தன் நண்பர்கள் சொந்த பந்தங்களை அழைத்து சென்று.
நிச்சயதார்த்தம் நன்றாக நடந்து முடிய, ஊருக்கு கிளம்பும் வேளையில், அவர்கள் வந்த வண்டியில் கோளாறு ஏற்படுகிறது. இதனால் ஒரு இரவு பெண் வீட்டில் தங்கிவிட்டு, நாளை காலை செல்லலாம் என முடிவு செய்கிறார்கள்.
ஆனால், அந்த சமயத்தில் கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இதனால் மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் பெண் வீட்டில் தங்கி விடும் சூழல் ஏற்படுகிறது. இந்த சமயத்தில், கட்டிக்கபோகும் பெண்ணிடம் பேசி பழகி நெருக்கமாக வேண்டும் என முயற்சி செய்கிறார் விக்ரம் பிரபு.
ஆனால், கதாநாயகியோ வேறு ஒருவரை காதலித்து வருகிறார். அவர் வேறொரு சாதி என்பதால் இவர்கள் திருமணத்திற்கு கதாநாயகியின் பெற்றோர் சம்மதிக்கவில்லை. அதற்கு பதிலாக விக்ரம் பிரபுவை தங்கள் மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு எடுத்துவிட்டனர்.
இப்படிபட்ட சூழ்நிலையில், ஒரு நாள் தான் காதலித்து வந்தவனுடன் கதாநாயகி ஓடிப்போய் விடுகிறார். இதனால் திருமணம் நின்று போக, கதாநாயகன் விக்ரம் பிரபு அதிர்ச்சியில் மயக்கம் போட்டு விழ, அதன்பின் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதி கதை..
கதாநாயகன் விக்ரம் பிரபு தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்.
மணப்பெண்ணாக அறிமுக நாயகி சுஷ்மிதா பட் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சுஷ்மிதாவின் தங்கையாக வரும் மீனாட்சி தினேஷ், துறுதுறுப்பான கதாபாத்திரத்தில் முத்திரை பதித்து நம்மை கவர்கிறார் அழகாலும் நடிப்பாலும். கஜராஜ், ரமேஷ் திலக், வடிவேலு, அருள்தாஸ் என இதில் நடித்த அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இதில் அருள்தாஸ் மட்டுமே ஸ்கோர் செய்கிறார். இரண்டாம் பாதியில் வரும் சத்யராஜின் கேமியோ ரசிக்கவைக்கிறது. ஷான் ரோல்டனின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது. மதன் கிரிஸ்டோபரின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.
திருமணம் ஆகாமல் ஒரு ஆண் படும் வேதனை, இந்த சமூகத்தில் அவனுக்கு எற்படும் அவமானங்களை திரையில் காட்டிய விதம் அருமை. அதே போல் சாதியை காரணமாக வைத்து நடக்காமல் போகும் திருமணங்கள் குறித்து பேசியதற்கு பாராட்டுக்கள். சாதியா இல்லை பெற்ற மகளா என்கிற சூழலில், கதாநாயகியின் தந்தை எனக்கு என் மகள்தான் முக்கியம் என எடுத்த முடிவு நன்றாக இருந்தது.
முதல் பாதியை கலகலபாபாக கோண்டுசென்ற இயக்குநர் சண்முக பிரியன் இரண்டாம் பாதியை இன்னும் கலகலப்பாக சொல்லியிருக்கலாம். பார்க்கலாம் பாராட்டுக்கள்.
மதிப்பெண் 3/5