பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாறான `காமராஜ்’ படத்தை இயக்கிய எ.பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சோழன், குணாபாபு, சுப்ரமணியம் சிவா, ஓ ஏ கே சுந்தர், கொட்டாச்சி, தனலட்சும், பாடினி குமார் மற்றும் பலர் நடித்து ஜூன் 27ல் வெளியாகும் படம் திருக்குறல்.
கதை
திருவள்ளுவர் வாழ்ந்த காலகட்டத்தில் நிகழ்ந்த கதையை படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் பாலகிருஷ்ணன்.
திருக்குறளை எழுதுவதற்கான பின்புலம் அப்போது வாழ்ந்த தமிழ் மக்களின் கலாசாரம், சில குறள் எழுதுவதற்கான சூழல் எப்படி ஏற்பட்டது, குறள்கள் தோன்றிய வரலாறு, இந்தக் காலகட்டத்தில் எந்தெந்த மன்னர்களின் பங்களிப்பு இருந்திருக்கிறது, சம்பந்தப்பட்ட மன்னர்கள் யார் யார், இப்படி பல விஷயங்களையும் பேசியிருக்கும் படம் காதலையும் கலந்து சுவராஸ்யமாக சொல்லியிருக்கும் படம் ‘திருக்குறள்
பாண்டிய மன்னர் ஆட்சிக் காலத்தில்தான் திருக்குறள் அரங்கேறியது. அந்த அரங்கேற்றம் நடப்பதற்கு முன்னால், நக்கீரர் தடுப்பார். ‘இந்தப் பாடல்கள் நாலடியில் இருக்க வேண்டும். ஆனால், ஒவ்வொரு குறளும் ஒன்றே முக்கால் அடிதான் இருக்கிறது’ என வாதிடுவார். ஆனால் பாண்டிய மன்னன்தான் குறளின் பொருள் உணர்ந்து அதை அரங்கேற்றுவார். இதுபோன்ற காட்சிகள் ரசனையாக சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
வள்ளுவராகச் சோழன் அவரது மனைவி வாசுகியாக தனலட்சுமி, புலவர் பெருந்தலைச்சாத்தனாக கொட்டாச்சி, பரிதியாக குணாபாபு இவரது காதலியாக பாடினி குமார்
நக்கீரராக இயக்குநர் சுப்ரமணிய சிவா, பாண்டிய மன்னராக ஓ.ஏ.கே சுந்தர் என இதில் நடித்த அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
இளையராஜாவின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது. எட்வினின் சகாயின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.
கலை இயக்குநராக சுரேஷ் கலேரியும், ஆடைவடிவமைப்பாளராக சுரேஷ் குமாரும் நன்றாக பணியாற்றியுள்ளனர். செம்பூர்.கே.ஜெயராஜ் கதை, திரைக்கதை, வசனம் அருமை.
பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரிலும், காந்தியின் வாழ்க்கை வரலாற்றை ” Welcome Back Gandhi ” என்ற பெயரிலும் திரைப்படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம், தற்போது திருக்குறளை வைத்து மிகப் பிரம்மாண்டமாகத் ‘திருக்குறள்’ என்ற திரைப்படத்தை மக்களுக்காக கொடுத்துள்ளார்கள். அவசியம் பாருங்கள்.