டிஎன்ஏ திரைவிமர்சனம்

ஜிப்ஸி, டாடா படங்களைத் தயாரித்த ஒலிம்பியா மூவீஸ் தயாரிப்பில் மான்ஸ்டர், பர்ஹானா ஒருநாள் கூத்து ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில்
அதர்வா, நிமிஷா சஜயன், பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக், விஜி சந்திரசேகர், சேட்;டன், சுப்ரமணியம் சிவா, கருணாகரன் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் டிஎன்ஏ. ஜிப்ரான் பிண்ணனி இசை ஒளிப்பதிவு பார்த்திபன்

கதை

ஹீரோ ஆனந்த்(அதர்வா முரளி) வாழ்க்கையில் காதல் தோல்வி ஏற்படவே அவர் மனமுடைந்து போய் ஆறுதல் தேடி போதைப் பொருள் பயன்படுத்துகிறார். ஒரு கட்டத்தில் போதைப் பொருள் இல்லாமல் இருக்க முடியாத அளவுக்கு சென்றுவிடுகிறார். நன்கு படித்தவர்களாக இருக்கும் குடும்பத்தை சேர்ந்த ஆனந்த் இப்படி போதைப் பொருளுக்கு அடிமையானதை பார்த்து அவரின் குடும்பத்தார் முகம் சுளிக்கிறார்கள். குடும்ப பெயரை கெடுக்கவே வந்திருக்கிறான் இந்த ஆனந்த் என அப்பா சிவ சுப்ரிமணியம் (சேத்தன்)கோபப்படுகிறார். ஒரு கட்டத்தில் ஆனந்துக்கு பெண் பார்க்க ஆரம்பித்து விடுகிறார். மற்றொருபுரம் கதாநாயகி திவ்யாவுக்கு(நிமிஷா சஜயன்) பார்டர்லைன் மல்டிபிள் டிஸ்ஆர்டர் எனும் மனநல பிரச்சனை இருக்கிறது. இதனால் அவருக்கு திருமணம் நடப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. மகளுக்கு கல்யாணம் நடக்க மாட்டேன் என்கிறதே என அம்மா விஜி சந்திரசேகர் புலம்பும் வேளையில் ஆனந்த் குடும்பம் பெண் பார்க்க வர இரு வீட்டனருக்கும் பிடித்து கல்யாணம்வரை வர கல்யாணத்தில் நிமிஷா மனநலம் உள்ளவர் என ஆனந்துக்கு தெரிய வர அதை பொருட்படுத்தாமல் திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழ அவர்களுக்கு ஆஸ்பிட்டலில் குழந்தை பிறக்கிறது. சில நிமிடங்களில் அந்த குழந்தை காணாமல் போக அதன் பிறகு அதர்வா காணாமல் போன தனது குழந்தையை கண்டுபிடித்தாரா? அவருக்கு குழந்தை உயிருடன் கிடைத்ததா? குழந்தையை திருடியவர்கள் யார்? எதற்காக திருடினார்கள்,? என்பதை அதர்வா கண்டு பிடிப்பதே படத்தின் மீதிக்கதை

அதர்வா நன்றாக நடித்துள்ளார். கதை கேட்கும்போது கல்யாணம்வரை சீன்கள் போராக உள்ளதை ஏன் கவனிக்கவில்லை என கேள்வி எழுகிறது. கல்யாணம்வரை ஜாலியாக கதையை இயக்குநர் சொல்லியிருக்க வேண்டாமா? வில்லன்களை பட ஓப்பனிங்கில் காட்டியதால் குழந்தையை திருடியவர்கள் யார்? என்ற சுவாராஸ்யம் ஏற்படவில்லை. இதையெல்லாம் இயக்குநரும் அதர்வாவும் கவணித்திருந்தால் படம் இன்னும் சுவாராஸ்யமாக இருந்திருக்கும். நிமிஷா சஜயன் கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். பாலாஜி சக்திவேல் போலிஸாக சிறப்பாக நடித்துள்ளார். இயக்குநர் சுப்ரமணியம் சிவா வில்லனாக மிரட்டியுள்ளார். ரமேஷ் திலக், விஜி சந்திரசேகர், சேட்டன், என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
பாடல்களுக்கு ஐந்து இசையமைப்பாளர்கள் ரசிக்கும்படி இருந்தது. பிண்ணனி இசை ஜிப்ரான் ரசிக்கவைத்துள்ளார்.
பார்த்திபனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.

இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இன்னும் சுவாராஸ்யமாக சொல்லியிருக்கலாம்.

#actoradharva#kuberamovie#moviereview#newfilm#tamilmovie
Comments (0)
Add Comment