பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி . ராஜ்கிரண், பால சரவணன், ஸ்வாசிகா பாபா பாஸ்கர் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் மாமன்.

பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி . ராஜ்கிரண், பால சரவணன், ஸ்வாசிகா பாபா பாஸ்கர் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் மாமன். இசையை ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு தினேஷ் புருஷோத்தமன் கணேஷ் சிவா படத்தொகுப்பு

கதை

சூரியும் சுவாசிகாவும் பாசமான அக்கா தம்பி. அகாகாவுக்கு குழந்தை இல்லை.இதனால் சூரி அக்காவுக்கு குழந்தை வேண்டிபல கோயில் செறு வழிபடுகின்றனர். நாட்டு வைத்தியத்தின்ஸ மூலமும் முயற்சி செய்கின்றனர். சில Grandparents பிறகு ஆண் குழந்தை அக்காவுக்கு பிறக்கிறது. அந்த குழந்தை சூரியுடன் அட்டாச் ஆகி மாமனும் மருமகனுமாக வளர்ந்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் சூரிக்கு திருமணம் நடக்கிறது. அந்த சிறுவன் சூரியுடனே இரவும் பகலுமாக எந்நேரமும் இருபபதால் முதலிரவு சூரிக்கு நடைபெறவில்லை. இதனால் சூரி மனைவி ஐஸ்வர்யா லட்சுமிக்கு கோபமா வர குழந்தையிடம் சூரியை பிரித்து மதுரைக்கு அழைத்து செல்கிறார். சூரிய பிரிந்த அந்த சிறுவனின் நிலை என்ன? மீண்டும் மருமகனாக அந்த சிறுவனுடன் சூரி சேர்ந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

சூரி கதாநாயகனாக பாடலிலும் சண்டைக்காட்சியிலும் நடிப்பிலும் சிறப்பாக நடித்துள்ளார். சூரியின் மனைவியாக ஐஸ்வர்யா லட்சுமியின் நடிப்பும் அருமை. சூரியின் அக்காவாக சுவாசிகா சிறப்பாக நடித்துள்ளார். மாஸ்டர் பிரகீத் சிவன் நடிப்பில் அசத்தியிருக்கிறார்.ராஜ்கிரன் விஜி சந்திரசேகர் இருவரின் நடிப்பும் அருமை.பாபா பாஸ்கர், ஜேயபிரகாஷ், பால சரவணன் கீதாகைலாசம் சாயாதேவி நட்புக்காக விமல் என இதில் நடித்த அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக படித்துள்ளனர்.
தினேஷ் புருஷேத்தமனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.ஹேஷாம் அப்துல் வஹாப்பின் இசையில் பாடல்கள் இசை பிண்ணனி இசை ரசிக்கவைக்கிறது.
படத்தில் சில லாஜிக் இருந்ததை சரி சேய்து இருகாகலாமா. உதாரணத்துக்கு இரவில்தான் பையன் முதலிரவுக்கு தடங்கள். பள்ளி செல்லும் பையன் என்கிறார்கள். பகலில் முதலிரவு கொண்டாடி இருக்கலாமே. அது மட்டும் அல்லாமல் சூரி அக்கா டீச்சர் மனைவி டாக்டர் பல இடங்களில் மேச்சுரிட்டி இல்லாமல் படிக்காத அந்த காலத்து பெண்கள்போல் நடந்து கோள்கிறார்கள். நல்ல கதையை கொஞ்சம் காமெடியுடன் திரைகாகதையில் லாஜிக் இல்லாமல் சுவாராஸாயமாக திரைக்கதையமைத்திருக்கலாம்.

இவ்வளவு குறைகள் இருந்தாலும்
ஒரு மாமனும், அவன் அக்கா மகனும் இடையிலான உறவைகளையும் அவர்களுக்குள் உள்ள அன்பு, அரவணைப்பு, மனவருத்தங்கள், புரிதல் இல்லாமை மற்றும் அந்த உறவை சோதிக்கும் நிகழ்வுகள் என குடும்பத்துடன் ரசிக்கும்படியான படத்தை கொடுத்துள்ளார் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன். பாராட்டுக்கள்.

#actorsoori#maaman#moviereview#newfilm#tamilmovie
Comments (0)
Add Comment