Take a fresh look at your lifestyle.

’பாம்’ திரைப்பட விமர்சனம்!

67

சென்னை:

விஷால் வெங்கட் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ், ஷிவாத்மிகா ராஜசேகர், காளி வெங்கட், நாசர், அபிராமி, பால சரவணன், சிங்கம் புலி, டி எஸ் கே, கிச்சா ரவி, பூவையார், எப்புட்றா ரோஹன், காவ்யா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் ‘பாம்’. இப்படத்திற்கு  விஷால் வெங்கட்கதைதிரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார்.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

ஒரு மலைப்பகுதியை ஒட்டி அமைந்திருக்கின்ற பகுதியில் காளகம்மாய்பட்டி என்ற கிராமம் தமிழ்நாட்டில்  இருக்கிறது. அங்குள்ள மக்கள் ஒரு காலத்தில் மிகவும் மகிழ்ச்சியாக தங்களது வாழ்க்கையை ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். அந்த கிராமத்தில் உள்ள மலை உச்சியில் வருடத்திற்கு ஒருமுறை ஜோதி தெரிவதும்,  ஒரு மயில் மலை உச்சியில் நின்று கூவிய பிறகு அங்குள்ள மக்கள் அதனை திருவிழாவாக எடுத்துக் கொண்டாடி வருகின்றனர். ஒருமுறை அந்த மலை கிராமத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அந்த கிராமமே மூழ்கி விடுகிறது. அந்த சமயத்தில், பாறைகள் இரண்டாம் உடைந்து இரண்டு கற்களாக பிரிகிறது., அதில் ஒரு பகுதியை ஒரு சாதியினரும் மற்றொரு பகுதியை மற்றொரு சாதியினரும் பிரித்து கடவுளாக நினைத்து வழிபடுகின்றனர். ஒரு கட்டத்தில் அந்தக் காளகம்மாய்பட்டி ஊர் இரண்டாக பிரிய வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. அந்த நேரத்தில் காளப்பட்டியாக ஒரு பகுதி மக்களும், கம்மாபட்டியாக இன்னொரு பகுதி மக்களுமாக பிரிந்து நின்கிறார்கள். 

இதனால் சாதி பாகுபாடு பார்க்காமல் ஒற்றுமையாக இருந்த கிராம மக்கள் திடீரென்று மோதலில் ஈடுபட்டு பிரிந்து விடுகிறார்கள். இதைத் தொடர்ந்து இரு பிரிவினருக்கும் அடிக்கடி மோதல் ஏற்படுகிறது.  வருடங்களும் உருண்டோடுகிறது. மேல் சாதியின் தலைவனாக சிங்கம்புலியும் கீழ் சாதியின் தலைவனாக கிச்சா ரவியும் வருகின்றனர். இந்த பிரச்சனையை தீர்த்து பிரிந்த கிராமங்களை ஒன்றிணைக்க வேண்டும் என்ற முயற்சியில் காளி வெங்கட் ஈடுபடுகிறார். அவருக்கு துணையாக அர்ஜுன்தாஸ் இணைந்து செயல்படுகிறார். இந்த சூழ்நிலையில் அவரது நண்பரான அர்ஜுன் தாஸ், அந்த கிராமத்தில் இருந்து வெளியேறி, வெளியூருக்கு சென்று வாழலாம் என்று அறிவுரை  கூறுகிறார். ஆனால், எந்த காலத்திலும்  நமது கிராமத்தை விட்டு வெளியேறப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார் காளி வெங்கட். ஒரு நாள் அதிகமாக மதுவை குடித்ததால் காளி வெங்கட் திடீரென்று இறந்து விடுகிறார்.

அவருடைய இறப்புக்குப் பின் அவருடைய உடல் தானாகவே சிலிர்க்கும் போதும், அவ்வப்போது வாயுவை வெளியேற்றும்போது அங்குள்ள மக்கள் அதிர்ச்சியடைகிறார்கள்.  இதனால், தன் நண்பர் இறக்கவில்லை என்று கருதும் அர்ஜுன் தாஸ், அவரது உடலை ஊர் பொது இடத்தில் உள்ள மரத்தடியில் எடுத்துச் சென்று வைக்கிறார். காளி வெங்கட்டின் சடலத்தை பலர் ஒன்றிணைந்து தூக்க முயலும்போது இரு கிராமத்தினரால் தூக்க முடியவில்லை. ஆனால் அவரது நண்பர் அர்ஜுன் தாஸ் ஒருவரால் மட்டும் காளி வெங்கட்டின் சடலத்தை தூக்க முடிகிறது. இதனல் அனைவரும் பயந்த நிலையில் இருக்கும்போது, அந்த கிராமத்தில் உள்ள பூசாரி காளி வெங்கட்டை திடீரென்று சாமியாக்கி விடுகிறார். இதனால், இரண்டு கிராமமும் இணைந்து காளி வெங்கட்டை சாமியாக வணங்குகிறது. இறுதியில் இரண்டு கிராம மக்களும் ஒன்றிணைந்தார்களா? இல்லையா? என்பதுதான் ‘பாம்’ படத்தின் மீதிக் கதை.

இப்படத்தின் கதைக்கு ஏற்ற கதாபாத்திரமாக மிக கச்சிதமாக பொருந்திருக்கிறார் அர்ஜுன் தாஸ். தனது எளிமையான் அளவான நடிப்பின் மூலம் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து, அதை அழகாக செய்து பலம் சேர்த்திருக்கிறார். ஒரு காட்சியில் சாமி வந்தது போல சாமியாடி ஒரு இடத்தில் கதையில் காமெடி செய்து அனைவரையும் சிரிக்க வைத்திருக்கிறார். 

இந்த படத்தில் இரண்டாவது கதாநாயகனாக  நடித்திருக்கும் காளி வெங்கட்டை கண்டிப்பாக இந்தப் படத்துக்காக பாராட்ட வேண்டும்பிணமாக நடிப்பது என்பது மிகவும் கஷ்டமான விஷயம். ‘மகளிர் மடும்’ படத்தில் நாகேஷ் இந்த மாதிரி பிணமாக நடித்திருப்பார். அதுபோல காளி வெங்கட் மிக தத்ரூபமாக மிக பொறுமையாகவும், பொறுப்புணர்வோடும் கையாண்டு ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து நடிப்பில் அசத்தி விட்டார்.

கிராமத்துப் பெண் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிவாத்மிகா, அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து மிகவும் கச்சிதமாக பொருந்தி அனைவரையும் கலங்க வைத்து விட்டார்.

அரசியல்வாதியாக நடித்திருக்கும் நாசர், மற்றும் சிங்கம்புலி, கிச்சா ரவி, அபிராமி, பால சரவணன், ராட்சசன் சரவணன் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் தங்களுக்கு கொடுத்த பணியை குறையில்லாமல் நிறைவு செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ராஜ்குமார் பி.எம் ஒளிப்பதிவில் கிராமத்து காட்சிகள் இயற்கை எழில் மிகுந்த அழகியலோடு படமாக்கப்பட்டிருப்பதை பாராட்டலாம்.

டி. இமானின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்தான். ஆனால் அதைவிட அதிகமாக காதை பிளக்கும் அளவுக்கு ஒலித்த பின்னணி இசை  படத்திற்கு பெரிதாகவே கைகொடுக்கவில்லை.

சாதி பிரச்சனை ஒழி வேண்டுமானால் இது மாதிரியான ஒரு கடவுள் வேண்டும் என்பதை இப்படத்தின் மூலம் இயக்குனர் விஷால் வெங்கட்,  கதை எழுதி நிரூபித்து காட்டி இருக்கிறார். சாதிப் பிரச்சனையில் மூழ்கியிருப்பவர்களை சிந்திக்க வைக்கின்ற அளவிற்கு இந்த படம் அமைந்து இருக்கிறது என்பதால் இயக்குனர் விஷால் வெங்கட்டை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.

மொத்தத்தில், ‘பாம்’  அனைவரையும் சிந்திக்க வைக்கும் படம்.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.