Take a fresh look at your lifestyle.

ஹைதராபாத்தில் நேற்று நடந்த ‘தி ராஜா சாப்’ முன்னோட்ட விழா!

72

ஹைதராபாத்:

ஹைதராபாத்தில் நேற்று நடந்த ‘தி ராஜா சாப்’ முன்னோட்ட விழா, வழக்கமான பிரம்மாண்ட சினிமா நிகழ்ச்சி மாதிரி இல்லை. அது ரசிகர்களின் உற்சாகம், படக்குழுவின் நம்பிக்கை, பிரபாஸின் மனிதநேயம் – இவை எல்லாம் கலந்த ஒரு உணர்ச்சிப் பொழுதாக மாறியது. மேடைக்கு வந்த ஒவ்வொருவரின் பேச்சிலும் ஒரு விஷயம் மட்டும் தெளிவாக இருந்தது.

‘தி ராஜா சாப்’ என்பது இன்னொரு படம் அல்ல; அது ஒரு குழுவின் கனவு.
“இந்த படம் ரசிகர்களுக்காக” – பிரபாஸ்

பிரபாஸ் பேசும்போது,

பெரிய டயலாக், விளம்பர வார்த்தைகள் எதுவும் இல்லை. “டார்லிங் ரசிகர்களுக்கு நல்ல பொழுதுபோக்கு தரணும் என்பதற்காக தான் இந்த படம்”என்று எளிமையாக சொன்னார். கிளைமாக்ஸ் பார்த்த பிறகு மாருதியின் எழுத்தில் தனக்கு ரசிகனாக மாறிவிட்டேன் என்று சொன்னது, இந்த படத்தின் மேல் அவருக்கு இருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்தியது. மாருதியின் ‘கம்பேக்’ படம் ஒரு படம் சரியாக போகாத நேரத்தில் கூட, “அடுத்த இரண்டு மூன்று வருடம் என் வாழ்க்கை ‘ராஜா சாப்’ தான்” என்று சொன்ன மாருதியின் உறுதி, மேடையில் பலமுறை பேசப்பட்டது.

இது வெறும் ஹாரர்–காமெடி இல்லை; அவருக்கு இது மீண்டும் நிரூபிக்கும் படம். “பிரபாஸ் இப்படித்தான்” – எல்லோரின் ஒரே குரல் ஜரீனா வாஹப் முதல் ரித்தி குமார், மாளவிகா மோகனன், நித்தி அகர்வால் வரை அனைவரும் சொன்னது ஒரே விஷயம்:

பிரபாஸ் ஒரு பெரிய நட்சத்திரம் இல்லை… நல்ல மனம் கொண்ட மனிதர்.
யூரோப்பில் படப்பிடிப்பு நடந்த போது, முழு குழுவுக்காக வீடு, சமையல்காரர், தெலுங்கு உணவு ஏற்பாடு செய்தது போன்ற சம்பவங்கள், மேடையில் பேசப்பட்டபோது ரசிகர்களிடையே பெரிய கைதட்டல் எழுந்தது.“பழைய பிரபாஸ் திரும்ப வருகிறார்”நடிகர் சப்தகிரி சொன்னது ரசிகர்களின் மனதை கவர்ந்தது.

“ஆக்ஷன் ஹீரோவாக மட்டுமே பார்த்த பிரபாஸை, பூ கையில் பிடித்து ரொமான்டிக்காக இந்த படத்தில் பார்க்கலாம்” என்ற அவர் பேச்சு, ‘தி ராஜா சாப்’ எதற்காக தனித்துப் பேசப்படுகிறது என்பதை சொன்னது.

மூன்று நாயகிகள் – மூன்று நிறங்கள் இந்த படத்தில் நித்தி, மாளவிகா, ரித்தி – மூவருக்கும் வெறும் பாடல், காதல் காட்சிகள் மட்டும் இல்லை. காமெடி, ஆக்ஷன், உணர்ச்சி என எல்லா வகையிலும் அவர்களுக்கு ஸ்பேஸ் கொடுத்திருக்கிறார் மாருதி. இதையே அவர்கள் மேடையில் திறந்த மனதுடன் பகிர்ந்துகொண்டார்கள். ஒரு விஷயம் மட்டும் உறுதி இந்த விழாவில் யாரும் “படம் நல்லா இருக்கும்” என்று மட்டும் சொல்லவில்லை. அவர்கள் பேசினது உழைப்பு, நம்பிக்கை, ரசிகர்கள், மனிதநேயம் பற்றி. சங்கராந்திக்கு பல படங்கள் வரலாம்.

ஆனால் ‘தி ராஜா சாப்’ பற்றி பேசும்போது, “இது படம் அல்ல… ஒரு கொண்டாட்டம்”
என்ற உணர்வு தான் மேடையிலும், ரசிகர்களிடமும் இருந்தது. ஜனவரி 9 ரசிக்க தயாராக இருங்கள்.
‘தி ராஜா சாப்’ – சிரிக்கவும், ரசிக்கவும், மனம் நெகிழவும். 🎬🔥