Take a fresh look at your lifestyle.

‘ரெட்ட தல’ திரைப்பட விமர்சனம்!

77

சென்னை:

அருண் விஜய், சித்தி இத்நானி ,தான்யா ரவிச்சந்திரன், யோகிசாமி, ஜான் விஜய், ஹரிஷ் பெராடி, பாலாஜி முருகதாஸ் நடித்துள்ளனர். இப்படத்தை கிரிஸ் திருக்குமரன் இயக்கியிருக்கிறார். இசை -சாம் சி எஸ், ஒளிப்பதிவு – டிஜோ டாமி, படத்தொகுப்பு – ஆண்டனி ,கலை இயக்கம் -அருண் சங்கர் துரை, ஸ்டண்ட் – பிசி ஸ்டண்ட்ஸ், தயாரிப்பு – பாபி பாலச்சந்திரன்.

சிறுவயதில் அனாதையாக திரியும் காளிக்கு (அருண் விஜய்) தோழியாகும் சிறுமி (சித்தி இத்னானி) வளர்ந்த பிறகும் தோழியாகவே இருக்கிறார். ஐந்துவருடங்கள் கழித்து காளி (அருண் விஜய்)தனது தோழியான சித்தி இதானியை சந்திக்க செல்கிறார். அப்போது பணக்கஷ்டத்தில் இருக்கிறார் சித்தி இதானி. இன்னொரு பக்கம் காளி என்ற அருண் விஜய் சித்தி இத்னானி தன்னை காதலித்து வருகிறார் என்று நினைத்து சித்தி இத்னானியை திருமணம் செய்யும் ஐடியாவில் இருக்கிறார். ஆனால் சித்தி இத்னானியோ காளி என்கிற அருண் விஜய்யிடம் “உன்னை திருமணம் செய்து கொண்டு நானும் கஷ்டப்பட விரும்பவில்லை. அதனால் மிகப் பெரிய பணக்காரன் ஒருவனை திருமணம் செய்யப் போகிறேன்…என்கிறார். தன்னுடைய காதல் பிசுபிசுத்துப் போன சோகத்தில் இருந்த அருண் விஜய், தற்செயலாக இன்னொரு அருண் விஜய்யான உபேந்திராவை சந்திக்கிறார்.

இருவருமே ஒரே மாதிரி இருப்பதால் இருவருக்கும் ஒரு குழப்பம் வருகிறது. ஒரு கட்டத்தில் உபேந்திரா காளியை பார்த்தவுடன் தன்னுடன் கூடவே அழைத்துச் செல்கிறான். அங்கு உபேந்திராவின் செல்வ செழிப்பை பார்த்து வியந்து போகிறான் காளி. இந்த சூழலில் காளி என்ற அருண் விஜய் உபேந்திரா என்ற அந்த பணக்கார அருணை சித்தி இத்னானிக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறார். உபேந்திரா மிகப்பெரும் கோடீஸ்வரர் என்பதை அறிந்து கொள்கிறார் சித்தி இதானி. உபேந்திராவை கொன்றுவிட்டு அந்த இடத்தில் காளியை வைக்க, முடிவு செய்த சித்தி இதானி அதனை காளியிடம் சொல்கிறார். வறுமையில் வாழும் அருண்விஜய் என்கிற காளி பணக்கார உபேந்திராவை கொன்றுவிட்டு,  அவரது ஸ்டைலில் தனது முடியழகை மாற்றிக் கொண்டு காளி மற்றும் சித்தி இதானி இருவரும் உபேந்திரா வீட்டிற்குள் செல்கின்றனர். ஆனால் அதற்குப் பிறகு காளியின் பாதையில் பல்வேறு பிரச்சினைகள் உருவெடுக்கின்றன. உபேந்திராவின் உண்மை முகம் தெரிய வரும்போது காளி வாழ்க்கை சிக்கலாகிறது. இறுதியில் அந்த சிக்கலில் இருந்து காளி மீண்டு வந்தாரா? இல்லையா? என்பதுதான் ‘ரெட்ட தல’ படத்தின் மீதிக் கதை.

இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் அருண்விஜய் அதற்காக மெனக்கெட்டிருக்கிறார்.தோற்றம் மற்றும் உடைகளில் மட்டுமின்றி நடிப்பிலும் நுட்பமான வேறுபாடுகளைக் காட்டியிருக்கிறார். சண்டைக்காட்சிகளில் அவர் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார் என்றே சொல்லலாம்.

நாயகியாக நடித்திருக்கும் சித்தி இத்னானிக்கு சிற்சில வறியவர்களின் பெரும் மனச்சிக்கலை முன்னிறுத்தும் முக்கியமான வேடம்.மொத்தக் கதையும் அவருடைய பார்வையில் அவரது எண்ணப்படி இயங்குகிறது.அதை உணர்ந்து அதற்கேற்ப நடிக்க முனைந்திருக்கிறார்.

தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பேரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ் ஆகியோர் எதிர்பாராத கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.அதற்கேற்ப நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

டிஜோ டாமியின் ஒளிப்பதிவு படத்தை மேன்மையாக்குகிறது.காட்சி வடிவமைப்பு மற்றும் ஒளியமைப்புகள் மிகவும் ஸ்டைலிஷாக அமைந்து ரசிக்க வைத்திருக்கின்றன.

சாம்.சி.எஸ் இசையில் தனுஷ் பாடியுள்ள பாடல் உட்பட எல்லாப் பாடல்களும் கேட்கும் இரகம்.திரைக்கதையின் திருப்பங்களுக்கு பின்னணி இசை பெரிதும் உதவியிருக்கிறது.

பணம் இல்லாதவனுக்கு அதுமட்டும் தான் சிக்கல் பணம் இருக்கிறவனுக்கு எல்லாமே சிக்கல் என்பார்கள்.அந்தக் கருத்துக்கு எடுத்துக்காட்டாகச் சொல்லும் வகையில் இப்படம் அமைந்திருக்கிறது.
இளமையில் வறுமை என்பதை உணர்ந்து இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் அப்படி இளமையில் வறுமையில் வாடும் ஓர் இளம்பெண்ணின் உளவியலை மையமாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதையை அமைத்திருக்கிறார்.அழுத்தமான மையக்கதையை வைத்துக் கொண்டு வெகுமக்கள் விரும்பும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கலந்து படத்தைக் கொடுத்திருக்கிறார்.

மொத்தத்தில் இந்த ’ரெட்ட தல’ படம் ஒரு ஸ்டைலிஷ் ஆக்சன் ரசிகர்களுக்கு பிடிக்கும்.

ரேட்டிங் 3/5.