Take a fresh look at your lifestyle.

‘அந்த 7 நாட்கள்’ – திரைப்பட விமர்சனம்!

52

சென்னை:

புதுமுக நடிகர் அஜிதேஜ், ஸ்ரீ ஸ்வேதா, கே பாக்யராஜ், நமோ நாராயாணா மற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான் ‘அந்த ஏழு நாட்கள்”

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

வானியல் ஆராய்ச்சி சார்பான படிப்பில்  ஈடுபட்டிருக்கும் இளைஞர் நாயகன் அஜிதேஜ். ஒரு நாள் பழைய டெலஸ்கோப் மூலம் 300 ஆண்டுகளுக்கு பிறகு வரும் சூரிய கிரகணத்தை ஆராயும் போது, திடீரென ஒரு விசித்திரமான அதிசய சக்தியை அவர் பெறுகிறார். அதன் மூலம் பிறருக்கு நடக்க இருக்கும் கெட்ட விஷயங்களை முன் கூட்டியே அறிந்துக் கொள்கிறார். அதாவது யாரையெல்லாம் கண்ணோடு கண் அவர் பார்க்கிறாரோ அவர்களின் மரண நாள், அஜிதேஜிற்கு தெரிந்து விடுகிறது.இந்த சமயத்தில் இவரும், ஜூனியர் வக்கீலான நாயகி ஸ்ரீஸ்வேதாவும் காதலர்களாக வலம் வருகிறார்கள்.

அந்த விசித்திரமான அதிசய சக்தி வழியாக காதலியின் ஆயுள் இன்னும் ஏழு நாட்களே இருக்கிறது என்பதைக் கண்டறிகிறார் நாயகன் அஜிதேஜ், இதனால், மனம் வேதனையடைந்த அவர், அந்த ஏழு நாட்களில் நாயகி ஸ்ரீ ஸ்வேதாவை காப்பாற்ற என்னென்ன முயற்சிகள் செய்தார். அவரது காதலியை அந்த மரணத்திலிருந்து காப்பாற்றினாரா? இல்லையா? என்பதுதான் ‘அந்த ஏழு நாட்கள்” படத்தின் மீதிக் கதை.

தமிழ் சினிமாவிற்கு இப்படத்தின்மூலம் அறிமுகமாகியிருக்கிறார் கதாநாயகன் அஜிதேஜ். தனது முதல் படத்திலேயே தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி வெற்றி பெற்றிருக்கிறார்.

கதாநாயகி ஸ்ரீ ஸ்வேதாவிற்கு இதுதான் முதல் படம் என்றாலும் தனக்கேற்ற  கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்ததற்காக அவரை கண்டிப்பாக  பாராட்ட வேண்டும். அதிலும், இறுதிக்கட்ட காட்சியில் அப்படியொரு மெனக்கெடல், ஒரு சிறந்த நடிப்பைக் கொடுத்து அனைவரையும் வியக்க வைத்து இருக்கிறார்.

அமைச்சராக நடித்திருக்கும் கே.பாக்யராஜ், கதாநாயகனின் தந்தையாக நடித்திருக்கும் நமோ நாராயணன், கதாநாயகியின் தந்தையாக நடித்திருக்கும் நடிகர், சுபாஷினி கண்ணன், தலைவாசல் விஜய், ஏ.பி.ஜனகன்  ஆகியோர் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து மிக சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

சச்சின் சுந்தரின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்தான்.பின்னணி இசை படத்தில் சொல்லப்பட்டிருக்கும் கதைக்கு தகுந்தவாறு பௌயணித்து இருப்பது பாராட்டத்தக்கது.

ஒளிப்பதிவாளர் கோபிநாத் துரை கதாபாத்திரங்களின் உணர்வுகளை நேர்த்தியாக படம் பிடித்து காட்சிகளை தரமாக கொடுத்திருப்பதோடு, அவர் படமாக்கிய விதம் பாராட்டும்படி இருக்கிறது.

கதை எழுதி இயக்கியிருக்கிறார் எம்.சுந்தர். நமது நாட்டில் இன்று அதிகமாகப் பேசப்படும் தெருநாய்க்கடிச் சிக்கல் மற்றும் அதன் விளைவுகளை உணர்த்தி விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய கதையை எடுத்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர். ரேபீஸ் தொற்று நோயால் பாதிக்கப்படும் நோயாளிகள் என்ன மாதிரியான இன்னல்களை அடைகின்றனர் என்பதை வெளிச்சம் போட்டு  காட்டியிருக்கிறார். உண்மையிலேயே இந்த மாதிரியான கதைகள் மூலம் இப்படத்தின்  இரண்டாம் பாதி முக்கியமான பிரச்சினையான  ரேபீஸ்  நோய் வந்தால் என்ன நடக்குமென்பதை  தெளிவாக சொல்லி இருந்தாலும் மக்கள் பெரிய அளவில் பாதிப்பு அடைகிறார்கள் என்பதை தெளிவாக காட்டவில்லை என்பதில் வருத்தம்தான்.

மொத்தத்தில், ‘அந்த 7 நாட்கள்’  ரசிக்கக் கூடிய படம்தான்.

ரேட்டிங் 2/5.

RADHAPANDIAN.