Take a fresh look at your lifestyle.

‘சரண்டர்’- திரைப்பட விமர்சனம்!

167

சென்னை:

கவுதம் கணபதி இயக்கத்தில் தர்ஷன், லால், சுஜித், முனீஷ்காந்த், பாடினி குமார், ஆரோல், ரம்யா ராமகிருஷ்ணன், சுந்தரேஸ்வரன், கெளஷிக் உள்ளிட்ட பல நடிகர்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம்தான் ‘சரண்டர்’.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

திருமழிசை காவல் நிலையத்தில் சீனியர் காவலர் லால் ரைட்டராக பணியாற்றுகிறார். இந்த நிலையில் மாநிலத்தில் தேர்தல் அறிவிக்கப்படுகிறது. அதனால் விஐபிகள் தங்களிடம் உள்ள துப்பாக்கிகளை காவல் நிலையத்தில் தேர்தல் முடியும் வரை ஒப்படைக்கும்படி  கமிஷனரிமிருந்து ஆணை வருகிறது. நடிகர் மன்சூரலிகான் தனது துப்பாக்கியை அந்த காவல்  நிலையத்தில் உள்ள ரைட்டர் லாலிடம் ஒப்படைக்கிறார். இந்த சூழலில் காவல்துறை பெண் ஆய்வாளருக்கும், ரைட்டர் லாலுக்கும் பிரசனை ஏற்படுகிறது. ஏற்கனவே ஞாபக மறதியில் இருக்கும் ரைட்டர் லால் அந்த துப்பாக்கியை லாக்கரில் வைப்பதற்கு பதிலாக வெளியே வைத்துவிட்டு லாக்கரை பூட்டி விடுகிறார்..அதன் பிறகு அந்த காவல் நிலையத்தில் இருந்து மன்சூரலிகானின் துப்பாக்கி திடீரென்று காணாமல் போகிறது. அந்த துப்பாக்கியை கண்டுபிடிக்கும் முயற்சியில் பயிற்சி துணை ஆய்வாளரான நாயகன் தர்ஷன் தலைமையிலான குழு ஈடுபடுகிறது. நான்கு நாட்களுக்குள் காணாமல் போன துப்பாக்கியை கண்டுபிடித்தாக வேண்டும்  என ஆய்வாளர் ஆணையிடுகிறார்.

தேர்தல் வருவதால், அதற்குள் துப்பாக்கியை கண்டுபிடிக்க வேண்டும் என்று ஆய்வாளர் கெடு வைக்கிறார். துப்பாக்கியை தான் கண்டுபிடிப்பதாக அந்த காவல்துறை ஆய்வாளரிடம் கூறுகிறார் தர்ஷன்.  இந்த கதை ஒருபக்கம் நடக்க, மற்றொரு பக்கம், தேர்தல் நெருங்கும் சமயத்தில் கட்சிப் பணத்தை பட்டுவாடா செய்ய பத்து கோடியை ஒருவரிடம் கொடுத்தனுப்புகிறார் பிரபல ரவுடியான சுஜித். அந்த பணத்தை இன்னொரு காவல்துறை அதிகாரியிடம் கொடுத்து அதை முக்கிய நபர்களிடம் கொடுக்க சொல்கிறார் ரவுடி சுஜித். அந்த காவல்துறை அதிகாரி செல்லும் வழியில் அவரது வாகனம் விபத்தில் சிக்கிக் கொள்ள பத்து கோடி பணம் தொலைந்து விடுகிறது. அந்த பத்து கோடி பணத்தைத் சுஜீத்தும், அவரது ரவுடி கும்பலும் தேடி அலைகின்றனர். இறுதியில் காவல்துறை அதிகாரியிடமிருந்து பத்து கோடி பணத்தை கைப்பற்றினார்களா? காணாமல் போன துப்பாக்கியை கண்டுபிடித்தார்களா?  இந்த தேர்தல் நடைபெறுவதற்குள் இரு பிரச்சனைக்கும் தீர்வு காணப்பட்டதா.? என்பதுதான் ‘சரண்டர்’ படத்தின் மீதிக் கதை.

கதாநாயகனாக நடித்திருக்கும் தர்ஷனுக்கு காவல்துறை கதாபாத்திரம் கச்சிதமாக பொருந்துவதோடு, கம்பீரமாக மிக அற்புதமாக ஒரு உண்மையான காவல் உதவி ஆய்வாளராக, யதார்த்தமாக நடித்து அனைவரது கவனத்தையும் பெறுகிறார். அவரது சிறந்த நடிப்பிலும் நல்ல முன்னேற்றம் கண்டிருக்கும் தர்ஷன், ஆக்‌ஷன் காட்சிகளிலும், உணர்வுப்பூர்வமான காட்சிகளிலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.

பல படங்களில் வில்லனாக வந்த லால் இதில் நேர்மையான சாந்தமான ரைட்டராக நடிப்பில் கலக்கி இருக்கிறார். ஞாபக மறதியில் இருப்பவராக நடித்திருக்கும் லால், தனது அனுபவம் வாய்ந்த நடிப்பு மூலம் தனது கதாபாத்திரத்திற்கும், இப்படத்திற்கும் பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் சுஜித், ரவுடி கதாபாத்திரத்தில் மிரட்டுகிறார். தனது அளவான நடிப்பு மூலம் கனகுவாக ‘யார் இந்த வில்லன்’ என மக்கள் மனதில் நிலைக்கும் அளவிற்கு  இடம் பிடித்து விடுகிறார் சுஜித்.

முனிஷ்காந்த் தனது குழுவுடன் வரும் காட்சிகள் சிரிக்க வைக்கிறது. பாடினி குமார், அருள் டி.சங்கர், நிஜ நடிகராகவே நடித்திருக்கும் மன்சூர் அலிகான், கெளசிக், சுந்தரேஸ்வரன் என அனைவரும் தங்களுக்கு கொடுத்த  பணியை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் மெய்யேந்திரன் இரவு நேர காட்சிகளையும், சண்டைக்காட்சிகளையும் அனைவரும் ரசிக்கும்படி மிகச் சிறப்பாக காட்சிகளை படமாக்கியிருக்கிறார்.

இசையமைப்பாளர் விகாஷ் படிஷா தன் பின்னணி இசையில். இப்படத்தின் கதைக்கு ஏற்ப பரபரப்பையும், விறுவிறுப்பையும் மிக சிறப்பாக பயணிக்க வைத்து இருக்கிறார். 

கதை எழுதி இயக்கியிருக்கும் கவுதமன் கணபதி, மிக சாதாரணமான ஒரு துப்பாக்கி காணாமல் போன சம்பவத்தை மையமக  வைத்துக் கொண்டு,,திரில்லர் கலந்த முறையில், பாடல்கள் எதுவும் இல்லாமல், காதல் களியாட்டம் இல்லாமல், ஒரு கதாநாயகியும் இல்லாமல் இந்த படத்தை அனைவரும் ரசிக்கும்படி இயக்கி அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார்.  காவல்துறையில் நடக்கும் அதிகாரிகளின் ஈகோ பிரச்சனை.. ரவுடிகளை மிரட்டும் அரசியல்வாதிகள்.. நேர்மையான கவல்துறை அதிகாரியின் நற்பண்பு.. இப்படியாக ஒவ்வொரு விஷயத்தையும் நுட்பமாக தெளிவாக கவனித்து, அதற்கேற்றவாறு திரைக்கதை அமைத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறார் இயக்குனர்.
மொத்தத்தில், ‘சரண்டர்’ ரசிகர்களை கவரும் படம்.
ரேட்டிங் 4/5.
RADHAPANDIAN.