Take a fresh look at your lifestyle.

அறிமுக இயக்குநர் அன்பு இயக்கத்தில் கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் யாழினி சந்திரன், கஸ்தூரி ராஜா, முனிஷ்காந்த், அருள்தாஸ், ஸ்ரீஜித் ரவி, ஏ. வெங்கடேஷ், எஸ்.எஸ். ஸ்டான்லி மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் படைத்தலைவன்.

33

கஸ்தூரி ராஜா (வெள்ளைச்சாமி) ஆக நடித்துள்ளனர். இவர்கள் மணியன் என்ற யானையை குழந்தையாக நினைத்து வளர்ந்து வருகிறார்கள். அப்படி பாசம் காட்டி வளர்ந்து வந்த யானைக்கு திடீரென மதம் பிடித்து பலரை அடித்து தும்சம் செய்து விடுகிறது. யானைக்கு மதம் பிடித்த வீடியோ இணையத்தில் டிரெண்டான நிலையில், நீதிமன்றம், இதற்கு மேல் யானையை வீட்டில் வைத்து வளர்க்கக்கூடாது, முகாமில் ஒப்படைத்துவிடும் படி சொல்ல, ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகின்றனர். முகாமில் இருந்த யானை திடீரென காணாமல் போய்விட, வேலு, யானையை தேடி, காடு மலையென அலைந்து திரிகிறார். அதன் பிறகு யானை கிடைத்ததா? இல்லையா? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

கதாநாயகனாக சண்முக பாண்டியன் நடிப்பிலும் சண்டைக்காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளார். கஸ்தூரிராஜாவின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம்.
யாமினி சந்தர் அழகான கதாநாயகியாக மனதில் இடம் பெறுகிறார். இன்னும் அவரை பயன்படுத்தி இருக்கலாம். வில்லனாக வரும் கருடன் ராம், மிரட்டல் நடிப்பால் கவனிக்க வைக்கிறார். ரிஷி ரித்விக் நடிப்பும் பேச வைக்கிறது.
மற்றும் முனிஷ் காந்த், அருள் தாஸ், ஸ்ரீஜித் ரவி, ஏ. வெங்கடேஷ், எஸ்.எஸ். ஸ்டான்லி என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கேரக்டர் உணர்ந்து சிறப்பாக நடததுள்ளனர்.
இசைஞானி இளையராஜா இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது
எஸ் ஆர் சதீஷ்குமாரின் ஒளிபபதிவு படத்திற்கு பெரிய பலம்.


முதல் பாதி கதை ஆமை வேகத்தில் செல்கிறது. இடைவேளைக்கு பிறகாவது கதையில் சூடு பிடிக்கும் என்று பார்த்தால் கதை எங்கெங்கோ சென்று கடைசியில் நரபலி கொடுப்பதில் வந்து முடிவடைகிறது. இயக்குநர் திரைக்கதையில் இன்னும்