ஜஸ்டின் பிரபு இயக்கத்தில் ஹரிகிருஷ்ணன் ஷீலா ராஜ்குமார் மாரிமுத்து மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் வேம்பு
ஜஸ்டின் பிரபு இயக்கத்தில் ஹரிகிருஷ்ணன் ஷீலா ராஜ்குமார் மாரிமுத்து மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் வேம்பு.
கதை
கதாநாயகன் ஹரி கிருஷாணன் போட்டோ பிடிக்கும் கடையை வைத்துக்கொண்டு பிழைப்பு நடத்தி வருகிறார். அவரது முறைப்பெண் ஷீலா ராஜ்குமார். ஷீலா ராஜ்குமாருக்கு சிலம்பத்தில் பெரிய ஆளாக வரவேண்டும் ஏன்பது ஆசை. குடும்ப சூழ்நிலையில் தான் ஆசைபபட்ட மாமன் ஹரிகிருஷ்ணனை திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்கு பிறகு ஷீலாவின் லட்சியம் ஹரிக்கு தெரிய அவரது ஆசையை நிறைவேற்றுவதாக வாக்குறுதி கொடுக்கிறார். அப்போது மின்னலடிக்க ஹரிக்கு கண்கள் பறி போய்விடுகிறது. அதன்பிறகு ஷீலாவுக்கு கண்ணுத்தெரியாத கணவனையும் குடும்பத்தையும் காப்பாற்ற வேலைக்கு போகிறார். அந்த வேலையும் சரிவர கிடைக்காததால் கணவனின் போட்டோ பிடிக்கும் வேலையை கற்றுக்கோண்டு நன்றாக குடும்பத்தை காப்பாற்றுகிறார். அதன் பிறகு ஷீலா தான் ஆசைபட்ட சிலம்பத்தில் ஜெயித்தாரா? தன் கணவணின் கண்களை குணப்படுத்தினாரா? ஏன்பதே படத்தின் மீதிக்கதை.
ஹரிகிருஷ்ணன் கதாநாயகனாக சிறப்பாக நடித்துள்ளார். ஷீலாவின் நடிப்பு மிகவும் பாராட்டவேண்டும். குடும்ப சுமை காதல், சிலம்பம் ஏன்று நடிப்பில் மிரட்டியுள்ளார். கதாநாயகின் அப்பாவாக நடித்தவரும் அம்மாவாக நடித்தவரும் பாட்டியாக நடித்தவரும் யதார்த்தமாக நடித்திருந்தனர். போட்டோ கடையில் வேலை செய்யும் பையனின் நடிப்பும் அருமை. ஹரியின் அம்மாவாக நடித்தவரின் நடிப்பும் பாராட்டதக்கது. மற்றும் மறைந்த மாரிமுத்து என இதில் நடித்திருக்கும்
அனைவரும் அவரவர் கேரக்டர் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
குமரனின் ஒளிபபதிவு படத்நிற்கு பெரிய பலம். மணிகண்டன் முரளி இசையில பாடல்களும் பண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது
இயக்குநர் ஜஸ்டின் பிரபு பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்ள சிலம்பம் அவசியம் அதை கற்றுக்கொள்ளுங்கள், கல்யாணம் ஆனாலும் ஆசைபட்ட லட்சியத்தை அடையுங்கள் என்ற கருத்தை சொல்லியுள்ளார். பாராட்டுக்கள். குடுமபத்துடன் பாருங்கள்.
மதிப்பெண் 3/5