எழுத்தாளர் ஜெயமோகன் கதை, திரைக்கதை, வசனத்தில் APJ ஏழுமலை இயக்கத்தில் சேது தேனப்பன் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் மையல்.
எழுத்தாளர் ஜெயமோகன் கதை, திரைக்கதை, வசனத்தில் APJ ஏழுமலை இயக்கத்தில் சேது தேனப்பன் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் மையல்.

கதை
பட ஓப்பனிங்கில் ஊரில் உள்ள ஓரு வீட்டில் இரட்டை கொலை நடக்கிறது. இந்த கொலையை யார் செய்திருக்கிறார்கள் என்று போலிஸ் விசாரணையை தொடங்கேகிறது. மறுபுறம் ஊரில் உள்ள ஆடுகளை திருடுபவர் கதா நாயகன் சேது. ஒரு இரவில் ஆட்டை திருடி செல்லும் போது ஊர் மக்களில் சிலர் சேதுவை துரத்துகிறார்கள். உடனே சேது ஊரில் ஒதுக்கு புறமாக உள்ள ஒரு மந்திரவாதி வீட்டின் ஆருகே உள்ள கிணற்றில் குதித்துவிடுகிறார்.
மந்திரவாதி கிழவியின் பேத்தியான கதா நாயகி சம்ரிதா சேதுவை காப்பாற்றி அடைக்கலம் தருகிறார். இந்த அடைக்கலம் அன்பாக மாறி காதலாக உருவெடுக்கிறது. கால் குணமாகி யாவுடன் ஊருக்கு சென்று சோத்தை விற்று பணம் ஏற்பாடு செய்து விட்டு மீண்டும் வந்து கரம் பிடிப்பதாக சம்ரிதாவுக்கு வாக்கு தருகிறார் சேது.அப்புறம் என்ன ஆச்சு? இரட்டை கொலை செய்தது யார்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
சேது யதார்த்தமான நடிப்புல உள்ளம் கவர்கிறார். ஹீரோயின் சம்ரிதி கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். பிஎல்.தேனப்பன் வில்லனாக மிரட்டலான நடிப்பை கொடுத்துள்ளார். மறைந்த சூப்பர் குட் சுப்ரமணி , ரத்னகலா ஏன இதில் நடித்த அனைவருமே அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
பால பழனியப்பன் ஒளிப்பதிவு படத்திற்கு பேரிய பலம். அமர்கீத் இசையில் பாடல்கள் பிண்ணனி இசை ரசிக்கவைக்கிறது
ஜெயமோகனின் கிராமிய கதையை அம்சமாக இயக்கியுள்ளார் ஏபிஜி ஏழுமலை. திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். பாராட்டுக்கள்.
.