Take a fresh look at your lifestyle.

‘காயல்’ – திரைப்பட விமர்சனம்!

58

CHENNAI:

அறிமுக இயக்குனர் தமயந்தி இயக்கத்தில் காயத்ரி சங்கர், அனுமோல், ஐசக் வர்கீஸ், கபாலி லிங்கேஷ், ரமேஷ் திலக், ஸ்வாகதா கிருஷ்ணா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம்தான் “காயல்”.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

பாண்டிச்சேரியில் காவல்துறையில் உதவி கமிஷனராக பணியாற்றி வருகிறார் ஐசக் வர்கீஸ். இவரது அன்பு மனைவியான  அனுமோல். தனது மகனை வெளி நாட்டிலும்,  மகள் காயத்ரி சங்கரை தன்னுடனும் வைத்து குடும்பம் நடத்தி வருகிறார். இந்த சூழ்நிலையில் அழகு தேவதையாக வலம் வரும் காயத்ரி சங்கர்  நாயகன்  லிங்கேஷ் மீது காதல் கொள்கிறார். இந்த காதல் விஷயத்தை தனது தாய் அனுமோலிடம் சொல்கிறார். இவர்களது காதலுக்கு ஒப்புக் கொள்ளாமல் மறுப்பு தெரிவிக்கிறார் அனுமோல். இதனால் மனம் வேதனை அடைந்த காயத்ரி சங்கர்,  காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கும் தன் தந்தை ஐசக் வர்கீஸிடம் காதல் விஷயத்தை சொல்கிறார். இவர்களது காதலுக்கு தந்தை ஐசக் வர்கீஸ் ஒப்புதல் அளித்து, காயத்ரி சங்கரின் காதலன் லிங்கேஷை சந்தித்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்ய முயல்கிறார்.

ஆனால் தாய் அனுமோல் அந்த திருமணத்திற்கு சாதி பாகுபாட்டினை கூறி தடையாக இருக்கிறார்.  வேறு சாதியை சேர்ந்தவனை தனக்கு மருமகனாக ஆவதை ஏற்றுக் கொள்ளமுடியாது என்று அவர்களது காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். எ​திர்ப்பு தெரிவித்து பிடிவாதம் பிடித்து அவளது விருப்பத்திற்கு மாறாக தன் சொந்த அண்ணன் மகனுக்கு திருமணம் செய்து வைத்து விடுகிறார்.  அதனால் வேதனையும், வெறுப்பும் ஏற்பட்டு காயத்ரி சங்கர் தற்கொலை  செய்துக் கொள்கிறார். இதனால் லிங்கேஷின் வாழ்க்கையில்  காயத்ரி சங்கரின் அகால மரணம் மிகுந்த வேதனையைக் கொடுத்து என்ன செய்வதென்று புரியாமல் தவிக்கின்ற சூழ்நிலை  ஏற்படுகிறது. காயத்ரி சங்கரின் நினைவுகளுடன் அவளை மறக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் லிங்கேஷ், தன் அலுவலகத்தில் பணிபுரியும் ஸ்வாகதா கிருஷ்ணனின் காதலையும் ஏற்க முடியாமல் தடுமாறி கொண்டிருக்கிறார். இறுதியில் ஸ்வாகதா கிருஷ்ணனின் காதலை ஏற்றுக் கொண்டு இருவரும் காதல் திருமணம் செய்துக் கொண்டார்களா? இல்லையா? என்பதுதான் ‘காயல்’ படத்தின் மீதிக் கதை.

இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் லிங்கேஷ், தனது கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து  இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தன் காதலியின் மறைவால் ஏற்படும் வேதனையை யதார்த்தமாக நடித்து சிறப்பு செய்துள்ளார்.

பாசமிகு தந்தையாக, மகளின் இழப்பை ஈடு செய்ய முடியாமல் தவிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஐசக் வர்கீஸ் தனது சிறந்த நடிப்பால் கவனம் ஈர்க்கின்றார்.

காயத்ரி சங்கரின்  தாயாக நடித்திருக்கும் அனுமோல் படம் முழுவதும் ஒரு அன்பு தாயாக தன் நடிப்பை உள்வாங்கி, அந்த கதாபாத்திரமாகவே மாறி வாழ்ந்து இருக்கிறார்.

அழகு தேவதையாக அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து இழுக்கும் காயத்ரி சங்கர் தனது சிறந்த நடிப்பின் மூலம் சாதி பாகுபாட்டினை ஒரு பெரிய விஷயமாகவே கருதாமல் அவர் பேசும் வசனங்களால்  கைத்தட்டல் பெறுகிறார்.

ரமேஷ் திலக்கின் கதாபாத்திரம் அனைவரையும் கலங்க வைக்கிறது. தனது கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படியாக உணர்வுபூர்வமாக நடித்திருக்கிறார்.

தனது கண்களாலேயே அனைவரையும் கவரும் விதத்தில் இன்னொரு நாயகியாக ஸ்வாகதா கிருஷ்ணா சிறு பிள்ளைத்தனமாக  நடித்து இருந்தாலும் சில காட்சிகளில் நமக்கு வெறுப்பை ஏற்படுத்துகிறது.

கார்த்திக்  சுப்ரமணியம் தன் ஒளிப்பதிவில் காட்சிகளுக்கு அழகைக் காட்டி படத்தோடு நம்மையும் ஒன்ற வைத்திருக்கிறார். கடலோர காட்சிகளை ரசிப்பு தன்மையுடன் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.

ஜஸ்டினின் இசையில் பாடல்கள் ஓகே. பின்ணணி இசை படத்திற்கு ஏற்றவாறு பயணித்து இருக்கிறது.

இப்படத்தில் சாதி பாகுபாடு பார்க்கும் பெண்களின் மனநிலையை மிக தெளிவாக, அவர்களின் உறுதி தன்மையை அது எதுவரை செல்லும் என்பதை வெளிச்சமாக காட்டியிருக்கிறார். நீண்ட வசனங்களை கொடுத்து போராடிக்காமல், நடிகர்களின் நடிப்பாற்றலுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர் தமயந்தி.

மொத்தத்தில், சாதிய எண்ணங்களுக்கு எதிரான ஒரு படம்தான் ‘காயல்’

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.